கேப்டவுனில் நடைபெற்ற 3 வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளிஸ்சிஸ் 78 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார்.
டுமினி 59 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்தார். அணித் தலைவர் ஸ்மித் 43 ரன்னிலும், அம்லா 16 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 16 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இந்தியா தரப்பில் ஜாகீர் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னா பாட்டீல், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பத்தான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்திய அணித் தலைவர் தோனி 8 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பதான் 50 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 59 ரன்களும், சுரேஷ் ரெய்னா 37 ரன்களும் எடுத்தனர். ஹர்பஜன்சிங் 25 பந்துகளில் 2 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை.
பந்து வீச்சில் மோர்னே மோர்க்கல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆட்ட நாயகனாக யூசுப் பத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment